Monday, January 3, 2011

கவிதைகள்

மாநகராட்சிக்கு,
புதிய துப்புரவு
பணியாளர்களோ ?
குப்பை தின்னும் கழுதைகள் !

***************************

சாக்கடைக் குளங்களை
வற்றச் செய்ய
முனிசிபாலிடியில்
புதிய திட்டம் ?
ரோடுகளில் பன்றி வளர்ப்பு!

**************************

இந்த வயதிலேயே
மூடை தூக்கி
உழைக்க ஆரம்பித்து விட்டதோ ?
புத்தகப் பையுடன் குழந்தை!

1 comment:

நெல்லி. மூர்த்தி said...

கவிதைகள் நறுக் தெறித்தாற்போல் அருமை! கலக்குங்க..