Wednesday, January 4, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில் - I

எங்களுக்கு தேவை உங்களின் பரிதாபமோ அல்லது நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடியவர்கள்  எனும் நினைவூட்டுதலோ அல்ல. நாங்கள் சமமானவர்களாக நடத்தப்பட வேண்டும் - கருத்து பரிமாற்ற திறன் மட்டுமே எங்களுக்கு அதனை பெற்று தரும். 
                                                                                          - லுயி பிரெயில்

மேற்கண்ட வாசகங்கள் பார்வை அற்றவர்களுக்கான எழுத்து முறையை அறிமுகபடுத்திய லுயி பிரெயில் என்பவரின் வார்த்தைகள். அவரின் எண்ணங்கள் இன்று ஓரளவுக்கு நிறைவேறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று லுயி பிரெயில்ன் பிறந்த நாள்.
லுயி பிரெயில் சிறு வயதில் அதிகமானோரை போலவே சரியான கண் பார்வை உடன் தான் வளர்ந்தார். அவருடைய மூன்றாவது வயதில் ஒரு நாள் தான் தந்தையின் தொழிற்கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் கண்களில் ஒரு கூறிய கருவியினால் காயம் ஏற்பட்டது. உடனே எடுத்து சென்று மருத்தவரிடம் காண்பித்த போதும், கண் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்ட போதும் கூட காயம் குணமாகவில்லை. மேலும் அந்த காயம் பயங்கரமான வலி ஏற்படுத்தியதுடன் அடுத்த கண்ணின் பார்வையையும் பறிக்க ஆரம்பித்தது.

லுயி பிரெயில் அப்படியும் துவண்டு விட வில்லை.தன் தந்தை ஏற்படுத்தி தந்த உன்றுகோலுடன்  பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தெரிந்த ஒருவர் கல்வி கற்குமாறு உற்சாகபடுத்தியுள்ளார். அதன் பயனாக வலேண்டின் ஹுஅய் என்பவர் ஏற்படுத்திய பார்வையற்ற குழந்தைகளுக்கான தேசிய நிறுவனம் எனும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு வலேண்டின் ஹுஅய் ஏற்படுத்திய புது விதமான முறையில் கல்வி கற்பிக்க பட்டது. இந்த முறையில் லத்தின் எழுத்துக்கள் கைகளால் தொட்டு பார்த்து உணரும் அளவில் அச்சு செய்யப்பட்டன. இந்த முறையில் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட அந்த கால கட்டத்தில் வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால் இந்த முறையே பின்பற்றப்பட்டது. லுயி பிரெயில் அங்கேயே கல்வி கற்று அதே பள்ளியில் ஆசிரியராக வேலையும் செய்ய ஆரம்பித்தார்.

லுயி பிரெயில்

இந்த சமயத்தில் தான் சார்லஸ் பார்பியர் லுயி பிரெயில்ஐ வந்து சந்தித்தார். அவர் முக்கியமாக வந்தது தான் உருவாக்கிய ஒரு எழுத்து முறையை பற்றி பேசுவதற்காக. சார்லஸ் பார்பியர் ராணுவ வீரர்கள் பேசாமலும், ஒளியின் துணை இல்லாமலும் படித்து அறியும் முறை ஒன்றை உருவாக்கி இருந்தார். அதில் அவர் 12 புள்ளிகளையும் சில கோடுகளையும் பயன் படுத்தி இருந்தார். அனால் அந்த முறை மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று இராணுவத்தினரால் நிராகரிக்க பட்டது. அந்த முறையை எல்லோரும் நைட் ரைட்டிங் என்று அழைத்தனர். லுயி பிரெயில் அந்த முறையில் இருந்த சில கடினமான சங்கதிகளை நீக்கி  பிரெயில் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிரெயில் முறையில் ஆங்கில எழுத்துரு
பிரெயில் முறையில் லுயி பிரெயில்ன் பெயர்












 அடுத்த பதிவில் பிரெயில் எழுத்து முறையை பற்றி பாப்போம்.

No comments: