Friday, January 6, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில்- II

இன்று லுயி பிரெயில்ன் இறந்த நாள். கண்களற்ற மனிதர்கள் படிக்கவும் எழுதவும் ஒரு வழியை உருவாக்கி தந்த அவர், தனது 45வது வயதில் இறந்தார். இந்த பதிவில் அவர் உருவாக்கி தந்த பிரெயில் எழுத்துமுறை பற்றி சிறிது பாப்போம்.

பிரெயில் எழுத்துமுறையின் தோற்றம் பற்றி எனது முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். லுயி பிரெயில் நைட் ரைட்டிங் எனும் முறையில் சில மாற்றங்களை உருவாக்கி அதனை   எளிதாக  மாற்றினார்.   லுயி பிரெயில் பிரெஞ்சு  எழுது  முறையில் உள்ள  ஒவ்வொரு  எழுத்துக்கும்  ஒரு குறியீட்டினை  உருவாக்க முயற்சி  செய்தார். முதலில்  அவர் எடுத்துக்கொண்டது  ஆறு  புள்ளிகள். இந்த குறியீடுகள் 1245  ஆகிய புள்ளிகளை மட்டுமே பயன் படுத்தின. ஆறு புள்ளிகளும் மேலிருந்து கீழாக, 1 முதல் 6 வரை குறிக்க பட்டன.அதில்  அவர் a-j  வரை  உள்ள  எழுத்துக்களுக்கு  தனி  தனி குறியீட்டினை அளித்தார். அவை எண்களுக்கும் பயன்படுத்த பட்டது. ஒரு குறியீடு எழுத்தை குறிக்கிறதா அல்லது எண்களை  குறிக்கிறதா என்று குறிப்பிடுவதற்கு ஒரு தனி குறியீட்டினை பயன் படுத்தினார்.  அடுத்த பத்து எழுத்துகளுக்கு அவர் மேலிருந்த அதே குறியீடுகளை 3வது இடத்தில மட்டும் ஒரு புள்ளி வைத்து பயன் படுத்தினார். அடுத்து உள்ள எழுத்துகளுக்கு 6ம் இடத்தில் புள்ளி சேர்க்கபட்டது. 
லுயி பிரெயில் உருவாக்கிய முறையில் தனி குறியீடுகளுக்கும் இடம் இருந்தது. ஆனால் பின் நாட்களில் சுருக்கெழுத்து முறையும் உருவாக்கபட்டு பயன்படுத்தபடுகிறது. அதே போல் எழுத்துகளுக்கு என்று இல்லாமல் இசை கோர்வைகளுக்கு என்று தனி முறை உருவாக்க பட்டுள்ளது. பல நாடுகள் தங்களது ரூபாய் நோட்டுகளில் பார்வையற்றவர்கள்  பயன்படுத்துமாறு இந்த முறையினை உபயோகிக்கிறார்கள். கனடாவில் அதிகமானோர் பிரெயில் முறையை உபயோகிக்கவில்லை என தெரிந்து வேறு முறை பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் நமது நாட்டின் சட்ட திருத்தங்கள் சில பிரெயில் முறையில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments: